செய்திகள் கலைகள்
மாரி செல்வராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் அமீர்
சென்னை:
தான் இயக்கிய ‘வாழை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். அப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அரவிந்த் இயக்கவுள்ளார். இதில் அமீர், ஸ்வாசிகா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் முடிக்கவுள்ளது படக்குழு. இதில் கதை, திரைக்கதையில் பணிபுரிந்துள்ளார் மாரி செல்வராஜ். இதன் படப்பூஜை சமீபத்தில் முடிவுற்று படத்தின் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அமீருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தனுஷ் படத்தை இயக்கும் முன்பு, ‘வாழை 2’ படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டுள்ளார் மாரி செல்வராஜ். இதில் கதிர், கயாடு லோஹர், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தை இயக்கி, தயாரிப்பது மட்டுமன்றி, அவருடைய உதவி இயக்குநர் அரவிந்த் படத்தை மாரி செல்வராஜ் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 5:29 pm
மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்கிறார் ராதிகா
May 19, 2026, 9:36 pm
இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்தது
May 14, 2026, 5:07 pm
கருப்பு வெளியீடு ரத்தானது குறித்து ஆர்ஜே பாலாஜி கண்ணீர்
May 13, 2026, 5:17 pm
இயற்கையும் கலையும் கை கோர்க்கும் அதிசயம்: திறந்தவெளி கலை அரங்காக மாறும் லங்காவி
May 7, 2026, 6:14 pm
படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்: வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்
May 7, 2026, 11:49 am
ஆர். பி. சவுத்ரிக்கு திரைத்துறையினர் புகழஞ்சலி
May 5, 2026, 9:43 pm
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார்
May 4, 2026, 4:05 pm
