செய்திகள் தமிழ் தொடர்புகள்
யானைகள் சண்டையில் சிக்கி சென்னை பெண் உயிரிழப்பு
சென்னை:
கர்நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயிரிழந்தார். கணவரின் கண் முன்னால் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகிற்கு சுற்றுலா சென்றார். இங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் மடிகேரியை அடுத்துள்ள துபாரே யானைகள் முகாமுக்கு சென்றனர். அங்கு 10 க்கும் மேற்பட்ட யானைகள் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தன.
அப்போது மார்த்தாண்டா, கஞ்சன் ஆகிய இரு யானைகள் ஒன்றையொன்று தாக்கின. இந்த யானைகளுக்கு இடையே சிக்கிய ஜாய்சி கீழே விழுந்தார். அருகிலிருந்த அவரது கணவர் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மனைவியை மீட்க தீவிர முயற்சி செய்தார். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. யானைகள் சண்டையில் படுகாயமடைந்த ஜாய்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கையில் குழந்தையுடன் மனைவியை யானைகளிடம் இருந்து மீட்க போராடிய கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 9:10 pm
பொதுக்குழுவை கூட்ட சி.வி.சண்முகம் ‘திட்டம்’ - பழனிசாமியின் எதிர் வியூகம் என்ன?
May 17, 2026, 10:42 pm
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
May 15, 2026, 3:11 pm
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
May 15, 2026, 10:16 am
தமிழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு விஜய் அழைப்பு: கிரிஷ் சோடங்கர் தகவல்
May 13, 2026, 2:30 pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
May 13, 2026, 12:09 pm
