செய்திகள் தமிழ் தொடர்புகள்
யானைகள் சண்டையில் சிக்கி சென்னை பெண் உயிரிழப்பு
சென்னை:
கர்நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயிரிழந்தார். கணவரின் கண் முன்னால் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகிற்கு சுற்றுலா சென்றார். இங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் மடிகேரியை அடுத்துள்ள துபாரே யானைகள் முகாமுக்கு சென்றனர். அங்கு 10 க்கும் மேற்பட்ட யானைகள் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தன.
அப்போது மார்த்தாண்டா, கஞ்சன் ஆகிய இரு யானைகள் ஒன்றையொன்று தாக்கின. இந்த யானைகளுக்கு இடையே சிக்கிய ஜாய்சி கீழே விழுந்தார். அருகிலிருந்த அவரது கணவர் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மனைவியை மீட்க தீவிர முயற்சி செய்தார். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. யானைகள் சண்டையில் படுகாயமடைந்த ஜாய்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கையில் குழந்தையுடன் மனைவியை யானைகளிடம் இருந்து மீட்க போராடிய கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
