நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடும்: ஓன் ஹபிஸ் காசி

ஜொகூர்பாரு:

தேசிய முன்னணி வரவிருக்கும் ஜொகூர் அமாநிலத் தேர்தலில் அனைத்து 56 மாநிலத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.

மந்திரி புசாரும் மாநில தலைவருமான டத்தோ ஓன் ஹபீஸ் காசி இதனை தெரிவித்தார்.

ஜொகூர் மக்கள், அடிமட்டத் தலைவர்களின் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கட்சித் தலைமைத்துவத்துடன் கலந்தாலோசித்த பிறகு, முழு நம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும்,

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் ஜொகூர் தேசிய முன்னணி  அனைத்து 56 மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று  அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset