செய்திகள் தமிழ் தொடர்புகள்
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
சிங்கப்பூர்:
குழந்தை இலக்கிய உலகில் பிரபலமாகி , பத்திரிக்கையாளராக, இதழியலாளராக, சிறுகதை எழுத்தாளராக, வானொலி நாடக ஆசிரியராக ,மொழி பெயர்ப்பாளராக, குறு நாவல், நெடுங்கதை, நாவல் என்று தன் வாழ் நாளின் கடைசி வரை எழுதிக் கொண்டிருந்த
சிங்கப்பூர் கலாச்சார விருது பெற்ற
திரு ஜலாலுதீன் முகம்மது சாலிஹ் எனும் ஜே. எம். சாலி இன்று தமிழகத்தில் காலமானார்.
நம்பிக்கை தொடங்கிய காலத்தில் இருந்து அவரது சிறுகதைகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம். நம்பிக்கையின் வளர்ச்சிக்கு அவ்வப்போது அவர் ஆலோசனைகளையும் வழஙகி வந்தார். மலேசியா வரும்போது நம்பிக்கை அலுவலகம் வராமல் செல்ல மாட்டார்.
ஆனந்த விகடன், இதயம், சாவி, கல்கி, குமுதம், குங்குமம், தினமணி என வெகுஜன பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். தமக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தையும் அவர் கொண்டிருந்தார்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் அழகிய பொறுமையைத் தருவானாக. அவருக்கு உயர் சுவனத்தை வழங்க நம்பிக்கை சார்பில் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
சிங்கப்பூரில் அவரது இறுதித் தொழுகை நடைபெறும் என்று எழுத்தாளர் ஷா நவாஸ் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
