நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

முகூர்த்​தம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும்: போக்​கு​வரத்து துறை

சென்னை:

முகூர்த்​தம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என, போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

மே 14ம் தேதி முகூர்த்த நாள், மே 15, 16, 17 வார விடு​முறை நாட்​களை முன்​னிட்​டு, சென்​னையி​லிருந்​தும் இதர இடங்​களுக்​கும், பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனை கருத்​தில் கொண்​டு, தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடுதலாக சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று  80 பேருந்​துகளும், நாளை 15-ம்தேதி  620 பேருந்​துகளும், 16-ம் தேதி 655 பேருந்​துகளும், சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்​களுக்கு நாளையும்  நாளை மறுநாளும் 120 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset