நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு: ராகுல் காந்தி கலந்து கொண்டார்

சென்னை:

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

என். ஆனந்த், ஆதவ் அர்ஜுண,  செங்கோட்டையன், , டாக்டர் கே. ஜி. அருண் ராஜ், பி. வெங்கடரமணன், ஆர். நிர்மல் குமார், ராஜ் மோகன், டாக்டர் டிகே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வனாத் அர்லேகர்
பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். 

‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

நடிகை திரிஷாவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். விஜய் பெற்றோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

- பிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset