செய்திகள் தமிழ் தொடர்புகள்
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்
சென்னை:
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி, ‘ரூ.258 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலாமாகியுள்ளது’ என திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ஆதவ் அர்ஜுனா தரப்பில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், திமுக ஐ.டி. பிரிவுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக எனது உறவினர் ஜான் பிரிட்டோ ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தவறினால் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 5:54 pm
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு
June 16, 2026, 2:51 pm
முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்
June 14, 2026, 5:43 pm
கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர் வினோத்
June 11, 2026, 4:10 pm
திரைமொழியில் தனிமொழி பேசிய இயக்குநருக்கு புகழஞ்சலி
June 10, 2026, 3:01 pm
பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
June 8, 2026, 12:58 pm
