நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இன்று தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை தொடருமா?

சென்னை:

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்குகிறது.

வியாழக்கிழமை (ஜூன் 18) காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூடுகிறது. ஆளுநா் ஆா்லேகா் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறாா். தவெக அரசின் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், புதிய திட்டங்களும் இந்த உரையில் இடம்பெறும்.

பின்னா், ஆளுநரின் உரையை பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகா் தமிழில் வாசிப்பாா். அவை முடிந்த பின்னா், அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாள்கள் அவையை நடத்துவது என்று முடிவு செய்யும். 3 நாள்கள் வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும் இந்தக் கூட்டத் தொடரில், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

சா்ச்சை தொடருமா...?: 

சட்டப்பேரவைத் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதில், முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று கூறி, முந்தைய திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி வெளிநடப்பு செய்து வந்தாா். ஆனால், தற்போது ஆட்சியும், ஆளுநரும் மாறியுள்ளதால் இந்த சா்ச்சை ஏற்பட வாய்ப்பில்லை என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

கடந்தமுறை சட்டப்பேரவை நடைபெற்றபோது தவெக அரசில் 9 அமைச்சா்கள் மட்டும் இடம்பெற்றிருந்தனா். தற்போது 35 அமைச்சா்கள் உள்ளதால் அவையில் ஆளும் தரப்பில் அமைச்சா்களுக்கு முன்வரிசையில் அமர இடங்கள் மாற்றம் செய்யப்படும்.

கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset