நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

சென்னை:

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு, கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல டெண்டர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மல்டி லெவல் கார் பார்கிங் போன்ற சில டெண்டர்களை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் இயக்குவதற்காக 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மின்சார பேருந்துகள் வாங்க கோரப்பட்ட டெண்டரால் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset