செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
சென்னை:
தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு அவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டது. அவையின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் பாடுவதே மரபு.
இதை மாற்றி, இன்று தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் பாடப்பட்டது. பின்னர், ஆளுநர் உரைக்கு பின்னரும் 2-வது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது. இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 18, 2026, 10:39 am
இன்று தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை தொடருமா?
June 17, 2026, 12:37 pm
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்
June 16, 2026, 5:54 pm
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு
June 16, 2026, 2:51 pm
முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்
June 14, 2026, 5:43 pm
கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர் வினோத்
June 11, 2026, 4:10 pm
