நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்

கும்பகோணம்:

கும்பகோணத்துக்கு அருகே சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே இந்த அவலம் நிகழ்ந்திருப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.

கும்பகோணத்துக்கு அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் 30,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு பெய்த மழையில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிவிடவே, அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் நம்மிடம், ‘`பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், கடந்த சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட 25,000 மெட்ரிக் டன் அளவுகொண்ட நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளும், அலுவலர்களும் முறையாக தார்ப்பாய் போட்டு மூடி நெல்லைப் பாதுகாக்கவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் பெய்த மழையில் சேமிப்புக் கிடங்கைச் சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கியது. முறையாக மூடப்படாததால், நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகின. சாக்குகள் கிழிந்து நெல் மணிகள் தண்ணீரில் கொட்டின.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset