நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் ஏன் இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை?: ஆளுநர் மாளிகை விளக்கம்

மாமல்லபுரம்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தவெக கட்சித் தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பாரா? ஏன் இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை? என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

ஆளுநரை இன்று காலை தவெக தலைவர் விஜய் மீண்டும் சந்தித்து, அவரது கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஆளுநர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று ஆளுநர் மாளிகை ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தவெக தலைவர் விஜய்யை, ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைத்திருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது ஏன் அவசியம் என்பது குறித்து விஜய்க்கு ஆளுநர் விளக்கம் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​எல்​ஏக்​கள் 2-வது நாளாக தங்​கவைக்​கப்​பட்​டுள்​ள​தால் பாது​காப்பு பணி​க்காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற்​றது. மேலும், வாக்கு எண்​ணிக்கை கடந்த 4-ம் தேதி நடை​பெற்​றது. இதில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 108 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் சென்​னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலைமை அலு​வல​கத்​தில், தலை​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்ற ஆலோ​சனை கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

பின்​னர், அங்​கிருந்து புறப்​பட்ட 80 எம்​எல்​ஏக்​கள் மாமல்​லபுரத்தை அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் அமைந்​துள்ள போர் பாயிண்ட் என்ற தனி​யார் நட்​சத்​திர விடு​திக்கு வருகை தந்​தனர். மேலும், தவெக ஆட்சி அமைக்​கும் வரை இந்த விடு​தி​யில் தங்​கு​வதற்​கான அனைத்து ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அக்​கட்​சி​யினர் தெரி​வித்​தனர். 

மேலும், தவெகவை சேர்ந்த எம்​எல்​ஏக்​கள் தங்​கி​யுள்​ள​தால் விடு​தி​யின் முகப்பு பகு​தி​யில் 2-வது நாளாக பாது​காப்பு பணிக்​காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset