செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற குழுத் தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு
சென்னை:
கிள்ளியூர் தொகுதியில் இருந்து 3-வது முறையாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக ராஜேஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள ராஜேஷ் குமாரை கட்சியின் பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்ததாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற அவருக்குத் தேவையான வலிமையும் ஞானமும் கிட்ட வாழ்த்துகிறோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:42 pm
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
May 15, 2026, 3:11 pm
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
May 15, 2026, 10:16 am
தமிழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு விஜய் அழைப்பு: கிரிஷ் சோடங்கர் தகவல்
May 13, 2026, 2:30 pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
May 13, 2026, 12:09 pm
