செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து பயணி குதித்ததால் பரபரப்பு
சென்னை:
சென்னை விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்தபோது, அவசரகால வெளியேறும் கதவைத் திறந்து கொண்டு ஒரு பயணி விமானத்தில் இருந்து குதித்தார்.
இன்று காலை ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா ஜி9 471 விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரான அந்த ஆடவரை, பாதுகாப்புப் படையினர் விமான ஓடுபாதையில் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனால் 231 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் பாதுகாப்பாக வாகன நிறுத்துமிடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 11:17 am
தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
May 3, 2026, 9:37 am
தன் வேட்பாளர்கள் விலை போக வாய்ப்புள்ளதால் குதிரை பேரத்தை தடுக்க விஜய் முக்கிய ஆலோசனை
May 2, 2026, 9:29 am
வட இந்தியா சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த ஐவர் படகு விபத்தில் சிக்கி மரணம்
April 30, 2026, 11:58 pm
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்ல வேண்டாம்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் கட்டளை
April 30, 2026, 4:08 pm
கருத்துக் கணிப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு
April 29, 2026, 9:32 pm
