செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து பயணி குதித்ததால் பரபரப்பு
சென்னை:
சென்னை விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்தபோது, அவசரகால வெளியேறும் கதவைத் திறந்து கொண்டு ஒரு பயணி விமானத்தில் இருந்து குதித்தார்.
இன்று காலை ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா ஜி9 471 விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரான அந்த ஆடவரை, பாதுகாப்புப் படையினர் விமான ஓடுபாதையில் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனால் 231 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் பாதுகாப்பாக வாகன நிறுத்துமிடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
