செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து பயணி குதித்ததால் பரபரப்பு
சென்னை:
சென்னை விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்தபோது, அவசரகால வெளியேறும் கதவைத் திறந்து கொண்டு ஒரு பயணி விமானத்தில் இருந்து குதித்தார்.
இன்று காலை ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா ஜி9 471 விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரான அந்த ஆடவரை, பாதுகாப்புப் படையினர் விமான ஓடுபாதையில் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனால் 231 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் பாதுகாப்பாக வாகன நிறுத்துமிடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:42 pm
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
May 15, 2026, 3:11 pm
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
May 15, 2026, 10:16 am
தமிழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு விஜய் அழைப்பு: கிரிஷ் சோடங்கர் தகவல்
May 13, 2026, 2:30 pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
May 13, 2026, 12:09 pm
