நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்ல வேண்டாம்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் கட்டளை

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெற உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பனையூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தல் த.வெ.க தலைவர் விஜய் அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கைபோது கவனமாக இருங்கள்.

நாம் எல்லோரும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வெற்றி பெற்றுவிட்டு வேறு எங்கும் சென்று விடாதீர்கள், நேராக பனையூர் வாருங்கள்.

உங்களுக்காக நான் இங்கு காத்திருப்பேன்.

தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் நான் தொடர்ந்து மக்களை சந்திப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset