செய்திகள் விளையாட்டு
மீபாவின் ஒற்றுமை கால்பந்து விழா; 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்பு: அன்பானந்தன்
சுங்கைபூலோ:
மீபாவின் ஒற்றுமை கால்பந்து விழாவில் கிட்டத்தட்ட 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மீபா தலைவர் அன்பானந்தன் இதனை கூறினார்.
இளம் விளையாட்டாளர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதே மீபாவின் முதன்மை இலக்காகும்.
இதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்காக கால்பந்து போட்டிகளை மீபா நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மீபா ஒற்றுமை கால்பந்து திருவிழாவை நடத்துகிறது.
இன்று, நாளை என இரு தினங்களுக்கு சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் 1,300 இளம் விளையாட்டாளர்கள் பங்கேற்றுள்ளர்.
குறிப்பாக இந்தியர்களை தவிர்த்து சீன, மலாய்க்கார விளையாட்டாளர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இது தான் இக்கால்பந்து போட்டியில் வெற்றியாகும்.
அதே வேளையில் இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆதரவு தந்த மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு எனது நன்றி என்று அன்பானந்தன் கூறினார்.
முன்னதாக நாட்டில் அதிகமான இந்திய பெண்கள் கால்பந்து விளையாடுகிறார்கள் என்றால் அதற்கு மீபா தான் காரணம்.
இதை யாராலும் மறுக்க முடியாது என்று மீபா துணைத் தலைவர் ராஜன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2026, 10:34 am
ரொனால்டோ, மெஸ்ஸி சாதனை வரிசையில் ஹாரி கேன் 95 ஆண்டுகளில் முதல் இங்கிலாந்து வீரர்
April 25, 2026, 10:19 am
உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் நிச்சயம் வரும்: ஃபிஃபா
April 24, 2026, 10:47 am
உலகக் கோப்பை 2026: ஈரானுக்குத் தடை இல்லை
April 24, 2026, 9:44 am
தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் யமால் இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்
April 24, 2026, 9:43 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின்வாசல் வழியாகச் செல்வது பொருத்தமானதல்ல: இத்தாலி
April 23, 2026, 10:11 am
ஆசியான் சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் அல் நசர்
April 23, 2026, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி முதலிடம்
April 22, 2026, 9:29 am
