செய்திகள் தமிழ் தொடர்புகள்
100% நம்பிக்கையோடு உள்ளேன்,”: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
எடப்பாடி:
“வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி 2 நாட்கள் அவரது சொந்த மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை, அவரது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு வந்து வாக்களித்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 100% நம்பிக்கையோடு உள்ளேன் என்று தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 12:37 pm
ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் மு க ஸ்டாலின்
April 23, 2026, 11:26 am
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்
April 23, 2026, 11:12 am
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
April 22, 2026, 10:42 pm
கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு குதிரையில் சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள்
April 22, 2026, 5:38 pm
நாளை வாக்குப்பதிவு: ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து விமானக் கட்டணமும் கடுமையாக உயர்ந்தன
April 21, 2026, 6:39 pm
