செய்திகள் தமிழ் தொடர்புகள்
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்
சென்னை:
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை - நீலாங்கரையில் தனது வாக்கினை சீமான் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
“தேர்தலில் வாக்கு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்சினை என்றவொரு கேள்வி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நூறு சதவீத வாக்கு பதிவாக வேண்டும் என தேர்தல் ஆணையம் சொல்லி வருகிறது.
குண்டு வைப்பது, கொலை செய்வது, சொத்து சேர்த்து கணக்கு காட்டாமல் இருப்பது மட்டும் குற்றம் அல்ல. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றம்தான். அது ஜனநாயக துரோகம் தான். கற்றவர்கள் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
ஒரு வாக்கு செலுத்துவதில் என்ன மாற்றம் என நினைக்கிறார்கள். ஒவ்வொரு வாக்கிலும் இருந்துதான் அந்த மாற்றம் வரும். நாம் எல்லோரும் வாக்கு செலுத்துவது நமது பொறுப்பு, கடமை. அதை தவறாமல் செய்ய வேண்டும் என அன்பாக வேண்டுகிறேன்” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 12:37 pm
ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் மு க ஸ்டாலின்
April 23, 2026, 12:32 pm
100% நம்பிக்கையோடு உள்ளேன்,”: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
April 23, 2026, 11:12 am
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
April 22, 2026, 10:42 pm
கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு குதிரையில் சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள்
April 22, 2026, 5:38 pm
நாளை வாக்குப்பதிவு: ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து விமானக் கட்டணமும் கடுமையாக உயர்ந்தன
April 21, 2026, 6:39 pm
