செய்திகள் தமிழ் தொடர்புகள்
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்
சென்னை:
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை - நீலாங்கரையில் தனது வாக்கினை சீமான் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
“தேர்தலில் வாக்கு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்சினை என்றவொரு கேள்வி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா, இந்த நாட்டின் ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நூறு சதவீத வாக்கு பதிவாக வேண்டும் என தேர்தல் ஆணையம் சொல்லி வருகிறது.
குண்டு வைப்பது, கொலை செய்வது, சொத்து சேர்த்து கணக்கு காட்டாமல் இருப்பது மட்டும் குற்றம் அல்ல. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் குற்றம்தான். அது ஜனநாயக துரோகம் தான். கற்றவர்கள் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
ஒரு வாக்கு செலுத்துவதில் என்ன மாற்றம் என நினைக்கிறார்கள். ஒவ்வொரு வாக்கிலும் இருந்துதான் அந்த மாற்றம் வரும். நாம் எல்லோரும் வாக்கு செலுத்துவது நமது பொறுப்பு, கடமை. அதை தவறாமல் செய்ய வேண்டும் என அன்பாக வேண்டுகிறேன்” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
