நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 6 மணி முதலே வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றிருப்பதைக் காண முடிந்தது.

கோடை வெப்பம் வாட்டும் என்பதால், பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில், 14 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள்; 3.98 லட்சம் போ் 85 வயதைக் கடந்தவா்கள். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தமிழகத்தில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,025 இடங்களில் உள்ள 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்த வாக்காளா்கள் - 5,73,43,291

ஆண்கள்-2,80,30,658

பெண்கள் - 2,93,04,905

மூன்றாம் பாலினத்தவா் - 7,728

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset