செய்திகள் தமிழ் தொடர்புகள்
கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு குதிரையில் சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள்
கொடைக்கானல்:
கொடைக்கானலில் சாலை வசதியில்லாத மலைக் கிராமங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குதிரை மூலமாக புதன்கிழமை (ஏப்.22) மாலை எடுத்துச் செல்லப்பட்டன.
தமிழகத்தில் நாளை (ஏப்.23) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மலைப் பகுதியில் 121 வாக்குச்சாவடிள் என மொத்தம் 339 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆண்கள் 1,15,728, பெண்கள் 1,21,582, இதரர் 49 என் மொத்தம் 2,37,359 வாக்காளர்கள் உள்ளனர்.
புதன்கிழமை (ஏப்.22) காலை பழநி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாகனங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உட்பட தளவாட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகெவி, சின்னூர், பெரியூர் ஆகிய மலைக் கிராமங்களில் மொத்தம் 508 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தக் கிராமங்களுக்கு சாலை வசதியில்லாததால் வாக்குப் பதிவு இயந்திரங்களை குதிரை மூலமாக எடுத்து செல்லப்பட்டன. நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
ஆதாரம்: தி ஹிண்டு
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
