நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்

ரியாத்:

ஏஎப்சி சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு அல் நசர் அணியினர் முன்னேறி உள்ளனர்.

ஷாபல் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அல் நசர் அணியினர்  அல் வாசி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் அல் வாசி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாடியோ மனே, இனிகோ, அப்துல்லா அல் அம்ரி ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset