நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் மென்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியிர் 1-2 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி அணியிடம் தோல்வி கண்டனர்.

இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும் 33 ஆட்டங்களுக்கு பின் அர்செனல் அணியினர் 70 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

ஆனால் 32 ஆட்டங்களில் விளையாடி உள்ள மென்செஸ்டர் சிட்டி அணியினர் 67 பிள்ளைகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இதனால் கிண்ணத்தை வெல்வதில் இரு அணிகளுக்கும் தற்போது கடும் போட்டி நிலவுகிறது.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset