நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு நிறைவு: கோடை விடுமுறை இன்று தொடங்குகிறது

சென்னை: 

பள்ளி முழு ஆண்​டுத் தேர்​வு​கள் நேற்றுடன் (ஏப்​.16) நிறைவு பெற்றதை அடுத்​து, மாணவர்​களுக்​கான கோடை விடு​முறை இன்று (ஏப்​.17) முதல் தொடங்​கு​கிறது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​புக்​கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் ஏப்​ரல் 6-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. அதே​போல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்​கான முழு ஆண்டு தேர்​வு​கள் ஏப்​ரல் 1-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. 

இந்த​ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெறவுள்​ள​தால், வழக்​கத்​தை​விட முன்​கூட்​டியே தேர்​வு​கள் நடத்​தப்​பட்​டன.

அதன்​படி 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்கு நடை​பெற்று வந்த முழு ஆண்​டுத் தேர்​வு​கள் நேற்​றுடன் (ஏப்​ரல் 16) நிறைவு​பெற்​றன. நிறைவு நாளில் சமூக அறி​வியல் உள்​ளிட்ட பாடத் தேர்​வு​கள் நடத்​தப்பட உள்​ளன.

ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: தொடர்ந்து இவர்​களுக்​கான கோடை விடு​முறை இன்று (ஏப்​ரல் 17) முதல் தொடங்​கு​கிறது. எனினும், ஆசிரியர்​கள் பள்ளி இறுதி வேலை​நாளான ஏப்​ரல் 25-ம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்​தாள் மதிப்​பீடு, மாணவர் சேர்க்கை போன்ற நிர்​வாகப் பணி​களை கவனிக்க வேண்​டும். கோடை விடு​முறை முடிந்து மீண்​டும் பள்​ளி​கள் ஜூன் 1-ம் தேதி திறக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

​​​​​- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset