நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

திருமணத்திற்கு முன் உறவு: 100 பிரம்படிகள் தண்டனை

பண்டா ஆச்சே: 

திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக, இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் காதலர்கள் நேற்று பிரம்பால் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகாணத் தலைநகரான பண்டா ஆச்சேயில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில் டஜன் கணக்கான மக்கள் பார்வையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

வயது வெளியிடப்படாத அந்த ஆணும் பெண்ணும் தலா 100 பிரம்படிகளைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வழக்குத் தொடுப்பு அலுவலக அதிகாரி ராஜேஷ் கன்னா, ஆச்சேவில் இஸ்லாமியச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது, மேலும் அது மீறப்பட்டால் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இப்போதுதான் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

திருமணமாகாத நபர்களுக்கிடையேயான பாலியல் உறவு ஆச்சேவில் தடை செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்த ஏஎஃப்பி செய்தியாளரின் கூற்றுப்படி, அந்த ஜோடியை அடிக்க போலிஸார் பிரம்புகளைப் பயன்படுத்தினர்.

ஏப்ரல் 7 ஆம் தேதி பிரம்பால் அடிக்கப்பட்ட ஆறு நபர்களில் அவர்களும் அடங்குவர்.

இதற்கிடையில், எதிர் பாலினத்தவருடன் உடல் தொடர்பு கொள்வது அல்லது மது அருந்துவது போன்ற குற்றங்களுக்காக மற்ற நான்கு நபர்கள் எட்டு முதல் 29 பிரம்படிகள் வரை பெற்றனர்.

இதற்கிடையில், 27 பிரம்படிகள் தண்டனை பெற்ற ஒரு பெண், கடைசி அடியில் மயங்கி விழுந்து மருத்துவ உதவியாளர்களிடமிருந்து சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

சூதாட்டம், ஒரே பாலின உறவுகள் உட்பட பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதில் பிரம்படித் தண்டனை ஆச்சேவில் இன்னும் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது.

ஜனவரி மாதம், ஆச்சேவில் உள்ள ஷரியா போலிஸார், திருமணமாகாத ஒரு ஜோடி காதலர்களை தலா 140 முறை பிரம்பால் அடித்தனர். இது, 2015 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து மிகக் கடுமையான தண்டனையாக நம்பப்படுகிறது.

இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய முஸ்லிம் இனத்தவர் வாழும் நாடாகும். இருப்பினும், இது அதிகாரப்பூர்வமாக ஆறு மதங்களையும், பழங்குடி நம்பிக்கைகளையும் அங்கீகரிக்கிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset