செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சியில் காற்றுடன் பலத்த மழை: 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம்
திருச்சி:
கடலோரத்தில் ராயலசீலா முதல் மன்னார் வளைகுடா வரை நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. திருச்சி மாநகரில் 9 மணியளவில் மழை தொடங்கியது.
காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சுமார் 2 மணி நேரம் மழை நீடித்தது. இதன்காரணமாக மேஜர் சரவணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இருந்த மரத்தின் கிளை முறிந்து மின் ஒயரில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காற்றுடன் பெய்த மழையால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.
இதேபோல் சமயபுரம், மண்ணச்சநல்லூர், துவாக்குடி உள்பட திருச்சியில் பல இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை காரணமாக வயலூர், எட்டரை, கோப்பு, மேலவயலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தது. தார் அறுக்கும் தருவாயில் இருந்த வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சேத மதிப்பு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
