செய்திகள் உலகம்
சர்வதேச காற்று மாசுபாடு அளவின் முதலிடத்தில் பாகிஸ்தான்: ஆசிய நகரங்களைச் சூழும் புகைமூட்டம்
சுவிட்சர்லாந்து:
சுவிட்சர்லாந்தின் 'ஐகியூஏர்' (IQAir) நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான உலகக் காற்றுத் தர ஆய்வறிக்கையில், ஆசிய நாடுகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அந்நாட்டின் காற்றில் கலந்துள்ள அபாயகரமான நுண்துகள்களின் (PM2.5) அளவு, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான அளவை விட சுமார் 13 மடங்கு அதிகமாகப் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை விடப் பாகிஸ்தானின் காற்றின் தரம் தற்போது மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
நாடுகளின் வரிசையில் பாகிஸ்தானைத் தொடர்ந்து, வங்காளதேசம் இரண்டாம் இடத்திலும், தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நகரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவின் லோனி நகரம் உலகிலேயே சுவாசிக்கத் தகுதியற்ற, மிகவும் மாசுவடைந்த நகரமாகப் பதிவாகியுள்ளது.
இந்நகரத்தின் சராசரி நுண்துகள்களின் அளவு 112.5 மைக்ரோகிராமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, சீனாவின் ஹோட்டன் நகரம் 109.6 மைக்ரோகிராம் அளவுகளுடன் உலகின் இரண்டாவது மாசடைந்த நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் மிக முக்கியமான எச்சரிக்கை என்னவென்றால், உலகின் மிகவும் மாசுவடைந்த முதல் 25 நகரங்கள் அனைத்தும் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளிலேயே அமைந்துள்ளன என்பதாகும்.
உலகளாவிய அளவில் வெறும் 14 சதவீத நகரங்கள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத் தர நெறிமுறைகளைப் பின்பற்றுவதாகவும், மீதமுள்ள பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்களுக்குக் கடுமையான சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 4:23 pm
"அந்த ஒரு போன் கால்.. மாறியது உலக வரலாறு": ஈரானைத் தாக்க டிரம்பை சம்மதிக்க வைத்த நெதன்யாகு
March 24, 2026, 12:14 pm
"பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை!": அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
March 24, 2026, 11:57 am
லண்டலில் பரபரப்பு: யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்புச் சம்பவம்
March 24, 2026, 11:56 am
காலம் கடந்தும் நிலைக்கும் காதல்: மனைவியின் கடைசி நிமிடம் வரை போராடிய 82 வயது கணவர்
March 24, 2026, 11:47 am
"இளைஞர்களின் உயிருடன் விளையாடாதீர்கள்": ராணுவ அதிகாரிகளைச் சாடிய அதிபர் பீட்ரோ
March 24, 2026, 10:52 am
ஒப்பந்தம் ஏற்பட்டால் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும்
March 24, 2026, 10:28 am
பெரு நாட்டில் பயங்கர சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 8:40 pm
