செய்திகள் உலகம்
தெற்கு இஸ்ரேலில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இஸ்ரேல்:
தெற்கு இஸ்ரேலில் உள்ள அராத், டிமோனா நகரங்களை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில், இஸ்ரேலின் வான்வழி பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகளை தடுக்க முடியாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அராத் நகரில் மட்டும் 75 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் கவலைக்கிடமாகவும், 13 பேர் நடுத்தர நிலையில் காயமடைந்தவர்களாகவும் உள்ளனர்.
மேலும் 48 பேர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து, தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
அதற்கு முன் டிமோனா நகரில் நடந்த தாக்குதலில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 10 வயது சிறுவன் ஒருவர் உட்பட சிலர் கடுமையாக காயமடைந்திருந்தாலும், அவர்கள் சுயநினைவுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஈரான், தனது நாட்டில் உள்ள நடான்ஸ் அணு நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முன்தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
டிமோனா பகுதியில் அணு வசதி இருப்பதாக கருதப்பட்டாலும், இஸ்ரேல் அதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்தி, பாதுகாப்பு குறைபாடுகளை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 1:40 pm
சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ராயல் கிங்ஸ் குழுமம்: பிரம்மாண்ட நோன்புத் திறப்பு நிகழ்வு
March 22, 2026, 12:18 pm
சிதைந்த நிலையில் காசா: கண்ணீரில் நனைந்த ஈகைத் திருநாள்
March 22, 2026, 11:44 am
தொழில்நுட்ப கோளாறு: கத்தார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
