நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து

டெய்ஜியோன்: 

டெய்ஜியோன் நகரில் உள்ள ஒரு கார் பாகங்கள் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 45 பேர் காயமடைந்தனர், அவர்களில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சியோலின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, இந்தத் தீ மதியம் சுமார் 1:00 மணிக்கு (0400 GMT) ஏற்பட்டது. மேலும், உள்ளூர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறிய தீ விபத்துக்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

தீ விபத்துக்குக் காரணம் இன்னும் தெரியவில்லை. பேரிடர்களை நிர்வகிக்கும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுமார் 45 பேர் காயமடைந்தனர், அவர்களில் 21 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 14 பேர் இன்னும் காணவில்லை" என்றார் அவர்.

நிர்வாகத் தலைவர் லீ ஜே மியூங், மீட்புப் பணிகளுக்காக அனைத்து முகமைகளையும் களமிறக்க உத்தரவிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset