நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் அரசு சாரா நிறுவனங்கள், முஸ்லிம் சமூகத்தை மேம்படுத்துவதற்காக ரமலான் முக்மின் பயணம் 2026: அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்

பினாங்கு: 

ரமலான் மாதத்தில் முக்மின் அமைப்பு நாடுமுழுவதும் பெருநாள் அன்பளிப்பு பொருள்களை வழங்குவதை மிக சிறப்பாகவும் உரியவர்களுக்கு செய்து வருகிறது. 

இன்று மாலை பினாங்கில் சீரிய முறையில் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இது மலேசியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக பெரிய அளவிலான உதவும் கரங்களாக உதவிவழங்குவதோடு பொதுமக்களுடன் நோன்பு திறப்பு நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்வில் சமூக உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் , 30க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஓ) பிரதிநிதிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்றார்கள்.

இந்த விழாவில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன் சிம் சீ கியோங் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். புனித ரமலான் மாதத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தையும் சமூகத்திற்குள் வலுவான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

மலேசியாவில் முதல் முறையாக, 30க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களின் ஒரு பெரிய கூட்டம் நடைபெற்றதை அனைவரும் சிலாகித்து கூறினர்.  மேலும் முக்கியமான அமைப்புகளுக்கு மொத்தம் RM300,000 ரமலான் உதவி நிதி விநியோகிக்கப்பட்டன.

குறிப்பாக ஒவ்வொரு அமைப்பும் மாண்புமிகு அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்களிடம் நேரடியாக காசோலைகளை பெற்றுக் கொண்டனர். சமூக நலன், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் அரசு சாரா நிறுவனங்கள் பணியாற்றி வருவதை ஆதரிப்பதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்கேற்பாளர்களிடையே ஒற்றுமை உணர்வையும் பகிரப்பட்ட நோக்கத்தையும் வளர்க்கும். இந்த முயற்சி நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அரசு சாரா நிறுவனங்களுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான நீண்டகால வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று முக்மினின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவுத் கூறினார்.

இந்த நிகழ்வு அர்த்தமுள்ள தாக்கத்தையும், தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதையும், ரமலானின் போது தாராள மனப்பான்மையையும் ஈகை குணத்தை பரவலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

முக்மின் அமைப்பு நாடு தழுவிய அளவில் பின்தங்கிய குழுக்களுக்கும் சுயநலமில்லாமல் சேவையில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு ஊக்குவிக்கிறது.

தொடர்ந்து இது போன்ற உதவிகளால் ஆதரவளிக்கும் வருடாந்திர திட்டமாக மாற்றுவதற்கான செயல் திட்டங்கள் ஏற்கனவே தீட்டப்பட்டு வருகின்றன என்று முக்மின் அமைப்பின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் டத்தோஸ்ரீ அக்மல் ஷேக் அலாவுதீன் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset