செய்திகள் கலைகள்
வாயால் சொன்னால் மட்டும் போதாது; உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: டத்தோ சிவக்குமார்
ஷாஆலம்:
வாயால் சொன்னால் மட்டும் போதாது. உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.
தனேஸ் பிரபு இயக்கத்தில் டாக்டர் கேஸ் வில்லன்ஸ் தயாரித்து நடித்துள்ள வீர கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
வரும் மார்ச் 5ஆம் தேதி முதல் இத்திரைப்படம் மலேசிய திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
இதன் சிறப்பு காட்சியை பார்த்ததில் மகிழ்ச்சி. இத்திரைப்படம் மிகவும் தரமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
மலேசிய திரைப்படங்களும் தரமாக வெளி வருகிறது என்பது இத்திரைப்படம் ஓர் உதாரணமாகும்.
இத்திரைப்படம் இறுதியில் ஒரு முக்கிய காட்சியும் வசனமும் உள்ளது.
இதற்காகவே மக்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும்.
குறிப்பாக திரையரங்குகளுக்கு வந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும்.
உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு தருவோம் என வாயால் சொன்னால் மட்டும் போதாது.
அக்கலைஞர்களின் திரைப்படங்கள் வரும் போது மக்கள் திரையரங்குகளுக்கு சென்று ஆதரவு தர வேண்டும்.
திரையரங்குகளின் வசூல் தான் இத்திரைப்படத்தின் வெற்றியாகும்.
ஆக மக்கள் இத்திரைப்படத்திற்கு முழு ஆதரவு தர வேண்டும் என டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
