செய்திகள் உலகம்
தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது
தெஹ்ரான்:
தெஹ்ரானைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலோ அல்லது அறிக்கையோ வெளியிடவில்லை.
தெஹ்ரான் மட்டுமின்றி, தலைநகரத்திற்கு அருகிலுள்ள கோம், நாட்டின் மத்திய பகுதியில் உள்ள இஸ்பாஹான் உள்ளிட்ட பல நகரங்களிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தியுள்ளதாக 'Fars News Agency' தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றும், அதிபர் அரண்மனை வளாகம் அமைந்துள்ள பாஸ்தூர் பகுதியும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படுவதற்கு முன், இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் (IRNA), அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக செய்தி வெளியிட்டது.
இதுவரை இந்தத் தாக்குதலில் எந்த உயர்நிலை அரசு அதிகாரியும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
மேலும், பாஸ்தூர் பகுதியில் சிலர் காயமடைந்ததாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 1:29 am
ஈரான் ஆரம்பப் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 85 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்தன
February 28, 2026, 7:22 pm
ஆயுதங்களைத் துறந்து சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
February 27, 2026, 3:14 pm
இஸ்ரேல் ராணுவ பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்தனர்
February 27, 2026, 2:39 pm
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது
February 27, 2026, 1:16 pm
தாய்லாந்து தேர்தலில் சர்ச்சை: தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி குற்றவியல் புகார்
February 27, 2026, 11:14 am
பிரேசில் தென்கிழக்கில் நிலச்சரிவால் 55 பேர் பலி
February 26, 2026, 5:31 pm
இரு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புதல்: எப்ஸ்டீன் குற்றங்களில் தொடர்பில்லை என மறுப்பு
February 26, 2026, 5:01 pm
