நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஷரிபா ஜூரியாவின் மறைவு நாட்டின் கலைத் துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர்

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் நாட்டின் புகழ்பெற்ற காட்சி கலைஞரான ஷரிபா ஜூரியா அல்-ஜெஃப்ரி அவர்கள் நேற்று மறைந்ததையடுத்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மறைந்த அவர் கொள்கை நெறிகளும், உயர்ந்த மனப்பான்மையும் கொண்ட ஒரு சிறந்த கலைஞர் என்பதால், அவரது மறைவு நாட்டின் கலை உலகிற்கு ஒரு பெரும் இழப்பாகும் என்று அன்வார் கூறினார்.

அவரது சேவைகள் நிர்வாகப் பணிகளின் மூலம் மட்டுமல்லாமல், மனிதநேயம், நீதியை மையமாகக் கொண்ட அவரது கலைப் படைப்புகள் மூலமும் வெளிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“‘WITHER COMPASSION? WITHER JUSTICE? WITHER PEACE?’ என்ற ஓவியங்கள் எனக்கு மிகவும் நெருக்கமான படைப்புகளில் ஒன்று. அது 1998 ஆம் ஆண்டு எனது பதவி நீக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது,” என்று அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த ஷரிபா ஜூரியா, தேசிய காட்சி கலை மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி, நாட்டின் காட்சி கலைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset