நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூலை மாதத்திலிருந்து எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை; என் கணக்கு காலியாக உள்ளது: அஸாம் பாக்கி

சைபர்ஜெயா:

ஜூலை மாதத்திலிருந்து எனக்கு எந்தப் பங்குகளும் இல்லை. என் கணக்கு காலியாக உள்ளது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

ஆஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது படி, அவான்பீரு டெக்னாலஜி பெர்ஹாட்டில் தனது பங்குகள் தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு முதல் எந்தவொரு நிறுவனத்திலும் உள்ள அனைத்து பங்குகளையும் விற்பனை செய்துவிட்டதாக அவர் கூறினார்.

அஸாம் பாக்கி மற்ற நிறுவனங்களிலும் பங்குகளை வைத்திருக்கிறார்.

அவை ஒரு நிறுவனத்தில் அரசு ஊழியர்கள் வாங்கக்கூடிய பங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதிமுறைகளுக்கு இணங்காமல் போகலாம்.

நிதிச் சேவை நிறுவனமான வேலாசிட்டி கேபிடல் பார்ட்னர் பெர்ஹாட்டில் அசாம் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாக ப்ளூம்பெர்க் நேற்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த பதில் வந்துள்ளது.

இந்நிலையில் என்னிடம் இப்போது எந்தப் பங்குகளும் இல்லை.

என்னிடம் இன்னும் பங்குகள் இருந்தால் உண்மைகளைக் காட்டுங்கள்.

அவான்பீரு எங்கே? எனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset