நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு; முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர், மனைவியை எம்ஏசிசி கைது செய்தது

அலோர்காஜா:

எம்ஏசிசி மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரின் முன்னாள் அரசியல் செயலாளரையும் அவரது மனைவியையும் சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கையூட்டு கேட்டு பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

2021 பிப்ரவரி,  நவம்பர் மாதத்திற்க்கு இடையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நம்பப்படும் ‘டத்தோ வீரா’ என்று அழைக்கப்படும் சந்தேக நபர், லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தி கிளாங் பள்ளத்தாக்கைச் சுற்றி ஒரு காண்டோமினியம் யூனிட்டை வாங்கினார் என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த கைதுகளை எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் இருவரும் நாளை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவலில் வைக்க விண்ணப்பிப்பதற்காகக் கொண்டு வரப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset