நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

4 கிண்ணங்களை வெல்லும் போராட்டத்தில் அர்செனல் உள்ளது: நிர்வாகி அர்தெதா

லண்டன்:

நான்கு முக்கிய கிண்ணங்களை வெல்லும் போராட்டத்தில் அர்செனல் உள்ளது.

அர்செனல் அணியின் நிர்வாகி மைக்கல் அர்தெதா இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அர்செனல் அணியின் நிலையான ஃபார்ம் இந்த சீசனில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றை அடைய வீரர்கள் தயாராக உள்ளனர்.

 அதே நேரத்தில் கிளப் இன்னும் நான்கு கிண்ணத்தை வெல்லும் போட்டியில் உள்ளது.

கடந்த மூன்று சீசன்களில் லீக்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்த அர்சனல், இப்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆறு புள்ளிகள் முன்னிலை வகிக்கிறது.

அனைத்து போட்டிகளிலும் கடைசி 10 ஆட்டங்களில் தோற்கடிக்கப்படவில்லை.

அவர்கள் தங்கள் ஆறு ஆட்டங்களில் ஆறில் வெற்றி பெற்றுள்ளனர்.

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் நான்காவது சுற்றை அடைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடந்த லீக் கிண்ண அரையிறுதியின் முதல் லீக்கில் செல்சியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் லீக்கிலும் முதலிடத்தில் உள்ளனர். நாங்கள் ஒரு நல்ல உத்வேகத்தை உருவாக்கி வருகிறோம்.

மேலும் இந்த சீசனில் 32 ஆட்டங்களில் நாங்கள் காட்டிய ஃபார்ம், நிலைத்தன்மையிலிருந்து அந்த நம்பிக்கை வந்துள்ளது என்று அர்தெதா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset