நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண போட்டிகளைப் பார்க்க நான்கு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கு டிரம்ப் தடை விதித்தார்

வாஷிங்டன்:

உலகக் கிண்ண போட்டிகளைப் பார்க்க நான்கு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்காவிலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளைப் பார்வையிட நான்கு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கு அவர் தடை விதித்துள்ளார்.

கடந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹைதி, ஈரான் முழு பயணத் தடைக்கு உட்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இது ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது.

ஆசிய தகுதிச் சுற்று மூலம் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நாடு ஈரான்.

ஹைட்டியும் இரண்டாவது முறையாக உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற செனகல், ஐவரி கோஸ்ட் அணிகள் பகுதி பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளன.

அமெரிக்கா முழுவதும் ஐசிஇ குடியேற்ற முகவர்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் டிரம்ப், வீரர்கள், பயிற்சியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பயணத் தடை விலக்குகளை வழங்கினார்.

இதனால் அவர்கள் தங்கள் அணிகளின் நடவடிக்கைகளைப் பார்க்க அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset