நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கோபா டெல் ரெய் கிண்ணம்: காலிறுதியில் பார்சிலோனா

மாட்ரிட்:

கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு பார்சிலோனா அணியினர் முன்னேறி உள்ளனர்.

எல் சான்சினோர்ஸ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ரேசிங் சாண்டாண்டர் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ரேசிங் சாண்டாண்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை பெரான் தோரஸ், லெமானே யமால் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் வெலன்சியா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பர்கோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset