நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.

எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை அந்தோனியோ செமன்யோ, ராயன் கார்கி ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் இறுதியாட்ட வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset