நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: அர்செனல் வெற்றி

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் வெற்றி பெற்ற வேளையில் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டனர்.

பிராட்டன் பார்க் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் போர்ஸ்மௌத் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் போர்ஸ்மௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணிக்காக கேப்ரியல் மார்தெனலி ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

மற்றொரு கோலை எதிரணி ஆட்டக்காரர் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.

வெஸ்ட்ஹாம் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கியூபிஆர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் லீட்ஸ் யுனைடெட், ஹூல் சிட்டி, நோர்விச் சிட்டி, வெஸ்ட்புரோம் விச் சிட்டி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset