நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அபார வெற்றியை பதிவு செய்தனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் எக்ஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 10-1 என்ற கோல் கணக்கில் எக்ஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் சார்ல்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். 

லெய்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் செல்தாவ்ன் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சண்டர்லேண்ட் அணியினர் 3-0 என்ற பெனால்டி கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் வோல்வேர்ஹாம்டன், புர்தோன் டவுன், பெர்ன்லி, சௌத்ஹான்டன், புல்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset