செய்திகள் தமிழ் தொடர்புகள்
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
கொழும்பு:
டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னைக்கு பயணித்த சுமார் 150 தமிழர்கள் உட்பட 300 பயணிகள் கடந்த மூன்று நாட்களாக கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
போதுமான உணவு, தண்ணீர், அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உரிய உதவிகளை செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய, தமிழக அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:09 pm
சென்னையில் இருந்து 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு
May 12, 2026, 11:02 am
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு
May 10, 2026, 1:11 pm
