நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து உலகில் முதல் முறையாக வரலாறு படைத்த மெஸ்ஸி

நியூயார்க்:

கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தனது கால்பந்து பயணத்தில் மொத்தமாக மெஸ்ஸி 896 கோல்கள், 404 முறை கோல் அடிக்க உதவி செய்து அசத்தியுள்ளார்.

எம்எல்எஸ் தொடரில் இந்தர்மியாமி அணி முதல் முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் அசிஸ்ட், 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.

மெஸ்ஸி - ரொனால்டோ ஒப்பீடு
இதன் மூலமாக கோல்கள் பங்களிப்பில் 1,300 (896 கோல்கள் + 404 அசிஸ்ட்ஸ்) என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரராக வரலாறு படைத்துள்ளார்.

அதிக கோல்கள் அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,213 கோல்கள் பங்களிப்பை (954 கோல்கள் + 259 அசிஸ்ட்ஸ்) நிகழ்த்தியுள்ளார்.

ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் மெஸ்ஸி இந்த வரலாற்றை நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில்தான் அதிக கோல்கள் அடித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset