செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பின் ஓய்வு பெறுகிறார் ரொனால்டோ
ரியாத்:
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியோனோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
வரும் 2026ல் உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடக்கும்போது எனக்கு 41 வயதாகி இருக்கும். அதுதான் எனது கடைசி உலகக் கிண்ண போட்டியாக இருக்கும்.
அதற்கு பின், அடுத்த உலகக் கிண்ண போட்டியில் கண்டிப்பாக ஆட மாட்டேன்.
கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன்.
அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது, சவூதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல கோடி ரிங்கிட் ஒப்பந்தத்தில் விளையாடி வருகிறார்.
அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டி ரொனால்டோவின் ஆறாவது உலகக் கிண்ண போட்டியாகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 12:36 pm
FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஸ்பெயின் அணி முன்னணி வகிக்கிறது
July 14, 2026, 9:52 am
உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்
July 14, 2026, 9:48 am
மெஸ்ஸி, நெய்மர் வரிசையில் எர்லிங் ஹாலண்ட்
July 13, 2026, 11:28 am
எம்பாப்பே சிறந்த நிலையில் இருப்பது பிரான்சுக்கு நிம்மதியை அளித்துள்ளது
July 13, 2026, 11:28 am
மெஸ்ஸியின் ஆளுமை அபாரமானது; ஆனால் தற்காப்பில் பலவீனமாக உள்ளார்: ரூனி
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
