நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அர்ஜெண்டினாவை வலுப்படுத்த மெஸ்ஸி, டி பால் ஆகியோருக்கு அழைப்பு

போனஸ் அயர்ஸ்:

அர்ஜெண்டினா அணியை வலுப்படுத்த வலுப்படுத்த மெஸ்ஸி, டி பால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அங்கோலாவுக்கு எதிரான நட்பு முறை ஆட்டத்தில்  அர்ஜெண்டினா களமிறங்கவுள்ளது.

நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் நட்புப் போட்டிக்கான தனது 24 பேர் கொண்ட அணியில் மெஸ்ஸி, ரோட்ரிகோ டி பால் ஆகியோரை அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி பெயரிட்டுள்ளார்.

இருப்பினும் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் இந்தர்மியாமி மேஜர் லீக்கின் பிளே ஆஃப் சுற்றில் போட்டியிடுகிறது.

இந்தர்மியாமி, நாஷ்வில் எப்சி அணிகள் தற்போது மேஜர் லீக்கின் பிளே ஆப் தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளன.

நாளை புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் நடைபெறும் இறுதிப் போட்டியை தீர்மானிக்கும்.

அவர்கள் முன்னேறினால், இந்தர்மியாமி நவம்பர் 22 அல்லது 23 அன்று  அரையிறுதியில் மட்டுமே மீண்டும் விளையாடும்.

கடந்த அக்டோபரில் வெனிசுலா, புவேர்ட்டோ ரிக்கோவுக்கு எதிரான இரண்டு நட்பு ஆட்டங்களில் மெஸ்ஸி மற்றும் டி பால் அர்ஜெண்டினாவுடன் இணைந்தனர், மெஸ்ஸி ஒரு முறை மட்டுமே விளையாடினார்.

நவம்பரில் அர்ஜெண்டினா பிரைமரா லிகா ஓய்வெடுக்காது என்ற உண்மையை ஸ்கலோனி கணக்கில் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதனால் தான் இந்த முறை உள்நாட்டு அணியிலிருந்து எந்த வீரர்களும் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset