செய்திகள் மலேசியா
உலகின் 10ஆவது செல்வாக்கு மிக்க முஸ்லிம் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அங்கீகரிக்கப்பட்டார்
கோலாலம்பூர்:
உலகின் 10ஆவது செல்வாக்கு மிக்க முஸ்லிம்தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஜோர்டானின் ரோயல் இஸ்லாமிய மூலோபாய ஆய்வுகள் மையம் உலகின் 500 மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10ஆவது செல்வாக்கு மிக்க முஸ்லிம் நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதே பிரிவில் கடந்த ஆண்டு 15ஆவது இடத்தில் இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இருந்தார்.
தற்போது அன்வாரின் இந்த உயர்வு, அவரது தலைமைத்துவத்திற்கும் உலகளவில் மலேசியாவின் நிலைப்பாட்டிற்கும் சர்வதேச அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கிறது.
மேலும் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 50 முஸ்லிம் பிரமுகர்களில் டத்தோஸ்ரீ அன்வரும் இடம் பெற்றுள்ளார்.
கட்டார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி முதலிடத்திலும், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்-அஜீஸ் அல்-சவுத் (எட்டாவது), இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (15ஆவது) போன்றவர்களுடன் அன்வாரும் இடம் பெற்றுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 2:46 pm
2021 முதல் 73 நிபுணத்துவ மருத்துவர்கள் மட்டுமே மலேசியா திரும்பியுள்ளனர்: சூல்கிப்ளி
October 30, 2025, 12:02 pm
திரெங்கானுவில் சோகம்: நான்கு கார்கள் மோதிய விபத்தில் ஒன்பது மாதக் குழந்தை உயிரிழந்தது
October 30, 2025, 10:19 am
1 மில்லியன் ரிங்கிட் சவாலுக்காக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் மொட்டை அடித்துக் கொண்டார்
October 30, 2025, 10:02 am
கைரி மீண்டும் அம்னோவில் இணைகிறாரா?
October 29, 2025, 5:28 pm
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
