நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் மக்களைவில் இதனை தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இந்திய சமூகத்தின் வளர்ச்சி விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டு, மித்ரா மூலம் மட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்கள், அமைச்சுகளுக்கிடையில் ஒதுக்கீடுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது இந்திய சமூகத்தின் தலைவிதியை நியாயமான, சமமான மற்றும் நிலையான முறையில் பாதுகாப்பதில் மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை காட்டுகிறது.

இந்திய சமூகத்தின் வளர்ச்சி இயற்கையில் விரிவானது. மாறாக மித்ராவின் கீழ் மட்டும் கவனம் செலுத்தப்படவில்லை.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு, கல்வியமைச்சு, மனிதவள அமைச்சு, வீட்டுவசதி, ஊராட்சித் துறை அமைச்சு, அனைத்து இனங்களுக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்கும் பிற அமைப்புகள் போன்ற பிற நிறுவனங்கள்,  அமைச்சு மூலம் பல்வேறு கூடுதல் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

இன்று மக்களவையில் மித்ராவை பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கை அளவில் விநியோக மசோதா 2026இன் இறுதி அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு.இந்திய சமூக சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 34 திட்டங்களை செயல்படுத்த பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், கல்வி, பயிற்சி, தொழில்முனைவோர், தொழில், சமயம், கலாச்சாரம், சமூக நல்வாழ்வு உள்ளிட்ட நான்கு முக்கிய துறைகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் ஆலயங்களுக்கான தர்ம மடானி  திட்டத்தின் கீழ் 20 மில்லியன் ரிங்கிச் ஒதுக்கீடு, தமிழ்ப்பள்ளிகளின் சிறிய பராமரிப்பு உட்பட உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு 12.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு ஆகியவை அடங்கும்.

கூடுதலாக பி40 இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை மேம்படுத்துவதற்கும் சிறிய பராமரிப்பு செய்வதற்கும் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும் அடங்கும்.

இந்திய சமூகத்தின் நீண்டகால மேம்பாட்டு திட்டங்களுக்கு ஏற்ப, இந்த ஆண்டு மித்ராவின் கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களும் இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்தும் முயற்சியில் அதிகாரமளிப்பு முயற்சிகளை உள்ளடக்கியது.

குறிப்பாக அரசு சாரா நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை.

இறுதியாக  இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset