நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் புடின் கலந்து கொள்ளவில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ளவில்லை.


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார்.

ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் புடினைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

அதிபர் புடின் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் பரிசீலித்து வருகிறார்.

அவர் பிரதிநிதித்துவப்படுத்த ரஷ்ய துணைப் பிரதமர் வருவார் என்று 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்கு முன்னதாக நேற்று இரவு உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்களுடனான சிறப்பு ஊடக சந்திப்பில் டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset