
செய்திகள் மலேசியா
சபா மக்களுக்கு வாக்களிக்க ஏர் ஆசியா 299 ரிங்கிட் கட்டணத்தை வழங்குகிறது
சிப்பாங்:
வரும் நவம்பர் 29ஆம் தேதி பொதுத் தேர்தலுடன் இணைந்து தீபகற்ப மலேசியாவில் உள்ள மக்கள் சபாவுக்குத் திரும்புவதற்காக ஏர் ஆசியா மூன்று நாள் நிலையான கட்டணச் சலுகையை வழங்குகிறது.
நவம்பர் 26 முதல் 28 வரை முக்கிய உள்நாட்டு இடங்களிலிருந்து சபாவுக்குச் செல்லும் விமானங்களுக்கு மட்டுமே நிலையான கட்டணம் பொருந்தும்.
எட்டு வழித்தடங்கள், 24 விமானங்களை உள்ளடக்கிய 4,300 க்கும் மேற்பட்ட இருக்கைகள் இதில் அடங்கும் என்று ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து கோத்தா கினாபாலு, சண்டகன், தாவாவ் அல்லது லாபுவான் வரை பறக்கலாம்.
மேலும ஜொகூர் பாருவில் இருந்து கோத்த கினாபாலு, தாவாவ் வரை,
அதே போல் கோத்தா பாரு, பினாங்கிலிருந்து கோத்தா கினாபாலு வரை 299 ரிங்கிட் ஒருவழியாக அனைத்து கட்டணங்களும் அடங்கும்.
இந்த அர்த்தமுள்ள நாளில், குறிப்பாக ஏர் ஆசியாவின் மிக முக்கியமான உள்நாட்டு சந்தைகளில் ஒன்றான சபாவில், சமூகங்களை இணைப்பதற்கும் மலேசியர்களை ஆதரிப்பதற்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி நிரூபிக்கிறது என ஏர் ஆசியா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm