
செய்திகள் மலேசியா
மடானி அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறது; சபாவின் வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ளது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மடானி அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதுடன் சாபாவின் வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
சபாவிற்கு மத்திய வருவாயில் 40 சதவீதம் தொடர்பான கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் மதிக்கிறது.
அதே வேளையில் அதற்கான காரணங்களை ஆராயும். மேலும் ஒட்டுமொத்த நலன்களுக்காக சட்டத்துறை தலைவரின் ஆலோசனையின் பேரில், எந்தவொரு அடுத்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்படும் தீர்ப்புக்கான காரணங்கள் ஆராயப்படும்.
முன்னதாக கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் 40 சதவீத உரிமையை நடைமுறைப்படுத்துவதற்காக, கூட்டாட்சி அரசியலமைப்பின் 112வது பிரிவின் கீழ் சபா அரசாங்கத்துடன் கூட்டு மறுஆய்வு நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
இந்த முடிவு கூட்டரசு அரசாங்கத்தால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும்.
அதே வேளையில் வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு சபா அரசாங்கத்திற்காகக் காத்திருக்கிறது என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm