
செய்திகள் மலேசியா
துருக்கி இளவரசர் கணக்கில் 486 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகளைத் தடுக்க எம்ஏசிசி உத்தரவைப் பெற்றது
கோலாலம்பூர்:
துருக்கி இளவரசர் அப்துல்லா அப்துல் அஜீஸ் அல் - சவுத்தின் கணக்கில் 486 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகளைத் தடுக்க எம்ஏசிசி உத்தரவைப் பெற்றது.
அக்டோபர் 7 ஆம் தேதி எம்ஏசிசி தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து நேற்று விசாரணை நடந்தது.
இதில் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் 2001 சட்டத்தின் பிரிவு 53 இன் கீழ் கோலாலம்பூர் குற்றவியல் உயர் நீதிமன்ற 1 நீதிபதி நூருல்ஹுடா நுரைனி முகமது நோர் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
1 எம்டிபி நிதியை தனது வங்கிக் கணக்கு மூலம் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் துருக்கி இளவரசர் அப்துல்லா அப்துல் அஜீஸ் அல் -சவுத் வருமானத்தைப் பெற்று, மாற்றியமைத்து, பயன்படுத்தியதாக 2011ஆம் ஆண்டு பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாக எம்ஏசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம், ஜேபி மோர்கனின் இரண்டு வங்கிக் கணக்குகளில் 87,148,732.89 டாலர், 2,777,759.74 டாலர், யூஎஸ்பி சுவிஸ் வங்கிக் கணக்கில் 15,394,169 டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எம்ஏசிசி வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2025, 11:01 pm
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்திய சமுதாயத்திற்கு பிரதமர் வழங்கிய தீபாவளி பரிசாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 10, 2025, 10:31 pm
2026 பட்ஜெட் மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பு
October 10, 2025, 9:55 pm
மலேசியாவின் நிதிப் பயணத்தில் 2026 பட்ஜெட் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிக்கிறது: டத்தோஸ்ரீ இக்பால்
October 10, 2025, 9:47 pm
மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர் அன்வார்
October 10, 2025, 6:50 pm
இந்திய சமுதாயத்திற்கான 220 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் ஒதுக்கப்படுகிறது: பிரதமர்
October 10, 2025, 6:49 pm
பிடிபிடிஎன் வாயிலாக 5,800 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி: பிரதமர்
October 10, 2025, 6:48 pm
மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர்
October 10, 2025, 6:23 pm